Government school student last news | படகில் சென்ற பள்ளிக்கு மாணவர்கள்
Government school student last news
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் படகுமூலம் மாணவர்கள் திங்கள்கிழமை (நேற்று) பள்ளிக்கு சென்றனர்.
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஊராட்சி, யமுனா நகரில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைகுத் திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த குடியிருப்புகளை சுற்றியிலும் 3 அடிக்கு தண்ணீர் தேங்கி இருப்பதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று பள்ளிகள் திறந்தால், தங்களது குழந்தைகளை படகுமூலம் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில், தரைதளத்தில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் இன்னும் வடியாததால் மாடியில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் தவித்தனர். ஒவ்வொரு வீட்டின் முன்புறம் தயார் செய்து வைத்திருந்த தெர்மகோல் படகில் ஆபத்தான முறையில் வந்ததால், பொதுமக்கள் வெளியே வந்து செல்ல நசரத்பேட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் பழவேற்காடு பகுதியில் இருந்து படகுகள் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.
ஒவ்வொரு பகுதிக்கும் பேருந்து சேவை போல், தற்போது இந்த பகுதியில் வடியாத மழை நீரால் படகு சேவை செய்யப்பட்டு வருகிறது.