அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஜூலை 31ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2026-2027) முதலாம் ஆண்டு மற்றும் நேரடி 2ஆம் ஆண்டு (லேட்ரல் என்ட்ரி) மற்றும் பகுதி நேர டிப்ளமோ படிப்புக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனர் பி ரத்தினசாமி தெரிவித்துள்ளார். நேரடி சேர்க்கை அறிவிக்கப்பட்டிருப்பதால், தகுதியுடைய மாணவர்கள் சம்மந்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேவையான கல்விச் சான்றிதழ்களுடன் சென்று உடனடி சேர்க்கை பெறலாம். இதற்கென தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.