பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை- தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றில் 30 சதவீத பணியிடங்களை இடஒதுக்கீடு இல்லாமல் தற்காலிக அடிப்படையில் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இது கண்டிக்கதக்கது.
Read Also: அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் விண்ணப்பம் வரவேற்புஇதனால் முனைவர் பட்டம் வரை படித்து, தகுதித்தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படும். பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் நியமினத்திலும் சமூக அநீதி தொடர அனுமதிக்க முடியாது. எனவே பல்கலைக்கழகங்களில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோரை தற்காலிக அடிப்படையில் நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, இட ஒதுக்கீட்டை கடை பிடித்து நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.