District Educational Officers Latest News | எட்டு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமனம்
District Educational Officers Latest News
முதன்மை கல்வி அலுவலர் உள்பட எட்டு மாவட்ட கல்வி அலுவலர் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, அந்த பணியிடத்திற்கு புதிய பொறுப்பு அலுவலர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ஞானபாக்கியசெல்வம் கூடுதல் பொறுப்பு ஏற்கிறார். தேனி முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, தேனி மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சங்குமுத்தையா நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடக்க கல்வி இயக்ககம் துணை இயக்குனர் (சட்டம்) திருநாவுக்கரசு ஓய்வுக்கு பின், தொடக்க கல்வி இயக்குனர் (நிர்வாகம்) அருளரசு பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் இராமசாமி (தனியார் பள்ளிகள் ஓய்வுக்கு பின், கே.மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பெ.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read Also: பள்ளி கல்வி இயக்குனர் – க்கு தலைமை செயலாளர் கடிதம்
திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) இராகவன் ஒய்வுக்கு பின், வி. கூத்தம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகவேல் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பாண்டியராஜசேகரன் ஒய்வுக்கு பின், கலங்கல் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் வே சுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பொன்னேரி, உமாமகேஸ்வரி ஒய்வுக்கு பின், சுப்பாரெட்டிபாளையம் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் வைலட்மேரி இசபெல்லா நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கனகராசு ஓய்வுக்கு பின், கோட்டைமேடு, குமரன் நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் பொறுப்பு ஏற்கும் அலுவலர்கள், அப்பணியிடத்தில் மறு அலுவலர் பணியேற்கும் வரை உண்டியல்கள் ஏற்பளிப்பது உள்ளிட்ட நிதி அதிகாரத்துடன் கூடிய முழு கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.