கோவையில் 17வயது சிறுமியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஏழு மாணவர்கள் குனியமுத்தூர் பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் சமூக வலைதளம் மூலம் கோவையை சேர்ந்த 17வயது சிறுமியை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டனர். ஆசை வார்த்தை கூறி, கடந்த ஞாயிற்றுகிழமை தங்களது அறைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு திரும்பாத காரணத்தால், அவரது பாட்டி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையில், சிறுமி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அவரை மீட்டு, விசாரணை நடத்தியபோது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்து அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.