கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவிகள் அகல்யா, அக்ஷயா பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தனர்.
இரட்டையர்களான இவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் இருவரும் ஒரே மதிப்பெண்கள் ஆன 555 பெற்று அசத்தியுள்ளனர்.இரட்டையர்களான இவர்கள் தேர்விலும் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது பள்ளி ஆசிரியர்களையும், தோழிகளையும், உறவினர்கள், ஊா் மக்கள் என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அகல்யா 600க்கு 555 மதிப்பெண்களைப் பெற்றார், தமிழில் 98, ஆங்கிலத்தில் 94, இயற்பியலில் 88, வேதியியல் மற்றும் உயிரியலில் 93 மற்றும் கணிதத்தில் 89 மதிப்பெண்களைப் பெற்றார்.அக்ஷயாவும் 555 மதிப்பெண் பெற்றார். தமிழில் 93, ஆங்கிலத்தில் 87, இயற்பியலில் 92, வேதியியலில் 94, உயிரியலில் 97 மற்றும் கணிதத்தில் 92.அது மட்டுமல்லாமல், அவர்களின் தேர்வு எண்கள் வரிசையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வழுக்குப்பாறை கிராமத்தை சேர்ந்த இவர்கள், தற்போது நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கின்றனர். தற்போது இவர்களுக்கு அனைவரும் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.