அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
33.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

மாணவி தீ வைத்து எரிப்பு – கல்வி அமைப்பு கண்டனம்

செய்திக்குழு, நேரம் 8.25am

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த போது, முருகன், கலியபெருமாள் ஆகியோர் மாணவியின் கைகளை கயிற்றால் கட்டி பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்த சம்பவம நாடு முழுவதும் பெரும் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கோர சம்பவத்திற்கு பல்வேறு தரப்புகள், மாணவ கூட்டமைப்புகள், அரசியல் கட்சியினர், கல்வி சங்கங்கள், முதல்வர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த போது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ததை, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கிறது.

இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட கயவர்களுக்கு அதிக பட்ச தண்டனையான தூக்கு தண்டனை அரசு பெற்று தரவேண்டும், இது போன்ற சம்பவம் இனி எந்த ஒரு சிறுவருக்கும் ஏற்படாத வகையில் இந்த தண்டனை முன் உதாரணமாக இருக்கவேண்டுமெனவும் குடும்பத்திற்கு நிதியை அதிகப்படுத்தி அளிக்கவேண்டும் என தமிழக அரசை அந்த கூட்டமைப்பு கேட்டு கொண்டுள்ளது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Posts