You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

போட்டி தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் - அரசாணையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்

TNPSC LATEST NEWS

தமிழக அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ்மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணையை 2021ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்டது. 

அரசாணையில் கூறியிருப்பதாவது, அனைத்து போட்டித்தோ்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம். தற்போது நடைமுறையில் உள்ள பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்படும். தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. கட்டாய தமிழ் மொழித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தமிழில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

இந்த அரசாணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், விண்ணப்பதாரர்களுக்கான கல்வித்தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. குரூப் 4 பதவிகளை வகிப்பவர்கள், மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம் என்ற வாதம் சரியானதுதான். தமிழ் மொழித் தாள் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மட்டுமே அரசு கூறுகிறதே தவிர, நூறு சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று தமிழ்நாடு அரசின் அராணையை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.