தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தனியாா் பள்ளிகளுக்கு அனுமதியே கொடுக்க மாட்டோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
தமிழ்நாடு பாஜக சார்பில் தேசிய கல்விக் கொள்கையை விளக்கும் வகையில், திருச்சியில் முதல் மண்டல பொதுக்கூட்டம் நடந்தது.அதில் அண்ணாமலை பேசியதாவது, மோடி பிரதமரானவுடன் மாணவர்கள் முன்னேற்றம் சார்ந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க கமிட்டி அமைத்தார். கடந்த 2019 மே 31ல் கல்வியாளர் கஸ்தூரி ரங்கள் புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை தயாரித்துக் கொடுத்தார். 1 முதல் 5ஆம் வகுப்பு வரை தாய் மொழயில்தான் படிக்க வேண்டும் என்பது தேசிய கல்வி கொள்கையின் முதல் அம்சம் 6,7,8ஆம் வகுப்புகளும் தமிழ் மொழியில் சொல்லி கொடுப்பதற்கான முயற்சி எடுப்போம் என்து இரண்டாவது அம்சம்.இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் திமுகவினரால் கட்டாய தமிழ் ெமாழி கல்வியை கொண்டு வரமுடியவில்லை. ஆனால், தமிழர்கள் தமிழ் மொழியை படித்தாக வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த முயன்றுள்ளார் மோடி. புதிய கல்விக்கொள்கையில் மூன்றாவது அம்சமாக கட்டாயம் ஹிந்தி படிக்க வேண்டும் என்று இருந்தது. அதை மாற்றி, ஏதேனும் ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என்று கொண்டு வந்தவர் மோடி. மக்கள் பணத்தை கொள்ளை அடித்தோர், ரவுடிகள், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றோரெல்லாம் தமிழகத்தின் கல்வி கொள்கையை வடிவமைப்பாரம். அதை ஏற்க முடியாது. தமிழகத்தில் பாஜ ஆட்சிக்கு வந்ததும், தனயிார் பள்ளியலும், அரசுபள்ளியிலும் சம கல்வி திட்டம் நடைமுைறப்படுத்தப்படும். தனியார் பள்ளிகள் புதிதான துவங்க அனுமதிக்க மாட்டோம். அரசு பள்ளிகளை மேம்படுத்தி, பி.எம் ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம், இவ்வாறு அவர் பேசினார்.