You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

நான்கு மாதமாக ஊதியம் நிறுத்திவைப்பு – பல்கலைக்கழக அதிகாரிகள் அட்டூழியம்

bharathiar university employees protest 2025

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காமல் பல்கலைக்கழக அதிகாரிகள் அட்டூழியம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஓட்டுநர்கள், தோட்ட கண்காணிப்பாளர், தூய்மை பணியாளர்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சுமார் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர்கள், துணை வேந்தர் குழு உறுப்பினர்கள் அலட்சியத்தால், நான்கு மாதங்கள் சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். 

குறிப்பாக, அவர்கள் பணி நீட்டிப்பு முடக்கிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பணியாளர்கள் பலமுறை மனு அளித்தும் லட்சகணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக அவர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். மேலும், பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது கூட என்று தெரியாமல், அமைச்சர் கோவி செழியனும் உள்ளதாக அவர்கள் புலம்புகின்றனர். 

நான்கு மாதம் சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், வாழ்வதாரம் முடங்கியுள்ளது. மாத தவணை, கடன் திருப்பி செலுத்து முடியாமல் அவர்கள் தினமும் தவித்து வருகின்றனர். இதனை கண்டித்து, ேம 1 தொழிலாளர் தினத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டத்தை நடத்தி, ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்,