மயிலாடுதுறையில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மயிலாடுதுறை மாவட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளிகளில் காலியாக உள்ள இடை நிலை ஆசிரியரி் பணயிடங்களுக்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தற்காலிக தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதுல் (24.6.2025) மற்றும் நாள் (25.6.2025) வரை வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவே உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் இரண்டாவது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நாைள மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.