You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Anbil Mahesh Latest Press Meet | கல்வி அமைச்சர் பிரஸ் மீட்டில் என்ன கூறினார்?

Typing exam apply Tamil 2023

Anbil Mahesh Latest Press Meet | கல்வி அமைச்சர் பிரஸ் மீட்டில் என்ன கூறினார்?

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு  காலை சிற்றுண்டி வழங்கும்  திட்டத்தை தமிழக  முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளி அருகே பெட்ரோல் பங்க் செயல்படலாமா?

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநில பள்ளிக்கல்வித் துறை சார்பில்  விருதுநகர், மதுரை,தேனி,சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது. இதில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறியதாவது:

பள்ளிகளின் உட்கட்டமைப்பு குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் 10 ஆயிரத்து 300 பள்ளி களின் கட்டடங்களை பராமரிக்க வேண்டியுள்ளது. 2500  பள்ளிகளில் மரத்தடியில் பாடம் நடத்தப்படுவதாகவும் அவற்றிற்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியும் விரைவில் தொடங்கப்படும்.  பள்ளிக் கட்டடங்களை கட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு கடந்தாண்டு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு ரூ.1300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மன ரீதியான பயிற்சியை அளிக்க சென்னையில் மட்டும் 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கை வளர வழிவகை ஏற்படும். வாரம் ஒருமுறை திரைப்படத்திற்கு மாணவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள்.   நூலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்கள் புத்தகங்களை படித்து உள்வாங்கி  அதன்மூலம் அவர்களின் படைப்பாற்றல் திறனை வைத்து மாநில அளவில் 250 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.