கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிாியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர) விடுப்புக் கோருதலுக்கான "CCMC ALL SCHOOLS TEACHERS வாட்ஸ் ஆப்" (Whatsapp) குழுவில் சிறுவிடுப்புகள் (தற்செயல் விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு) ஆகியவற்றை முன்னதாக தெரிவித்து, ஆணையர் அவர்களால் விடுப்பு அனுமதிக்கப்பட்ட பின்னரே விடுப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும், இதர விடுப்புகள் (மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு) ஆணையர் அவர்களிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே நேரடியாக அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட வாட்ஸ் ஆப் (Whatsapp) குழுவில் தமது பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் (பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர) இணைக்கப்பட்டுள்ளதை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும். இந்த சுற்றறிக்கையினை பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் சுற்றுக்கு விட்டு கோப்பில் பராமரிக்க தெரிவிக்கப்படுகிறது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.