அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

TN Quarterly Examination Leave Latest News | காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு

TN Quarterly Examination Leave Latest News | காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு

TN Quarterly Examination Leave Latest News

1 முதல் 5ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை 3ம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தொடக்க கல்வி இயக்ககம் தொிவித்துள்ளது.

முன்னதாக, பள்ளி கல்வித்துறை காலாண்டு தேர்வு முடிந்து அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மட்டும் செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி முடிய முதல் பருவத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

பருவத்தேர்வு முடிந்து அக்டோபர் 9ம் தேதியிலிருந்து 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழக்கம்போல் பள்ளிகள் மீண்டும் செயல்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக வட்டாரம் தோறும் அக்டோபர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக வழங்கப்பட உள்ளது.

மேலும் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, இரண்டாம் பருவத்திற்கான வகுப்புகள் தொடங்கும் என தொடக்க கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Posts