அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

TN Protest Teacher Arrest | போராட்ட ஆசிரியர்கள் கைது

TN Protest Teacher Arrest | போராட்ட ஆசிரியர்கள் கைது

TN Protest Teacher Arrest

அமைச்சர் அறிவிப்பில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தமிழக அரசின் உத்தரவின்போில் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி டெட் தேர்வர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 10 நாட்களாக சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஏற்கனவே பல பெண் ஆசிரியா்கள் மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், ஆசிரியா்கள் கோரிக்கைக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவா்கள், பல்வேறு அமைப்புகள் போராட்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர். போராட்டம் தீவிரம் அடையவே, மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று செய்தியாளா்களை சந்தித்து, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக, குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பகுதி நேர ஆசிாியா்களுக்கு ரூ.2500 ஊதிய உயா்வும், ரூ10 லட்சம் காப்பீடும், டெட் தேர்வர்களுக்கு ஆசிரியர் பணி வயது வரம்பு நீட்டிப்பு என அறிவித்தார். இதில் அவர்களுக்கு உடன்பாடு ஏற்படாததால், அவர்கள் டிபிஐ வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனா்.

இந்த நிலையில், போலீசார் இன்று காலை மாநகர பேருந்துகளை வரவழைத்து ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர். தற்போது 200க்கும் மேற்பட்ட போலீசார் டிபிஐ வளாகத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பாக உள்ளது. டிபிஐ வளாகம் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Posts