அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
32.4 C
Tamil Nadu
Thursday, March 30, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

அடேங்கப்பா… அரசு பள்ளியில் சேர்ந்தால் ரூ.1000 அன்பளிப்பு

தமிழக அரசு உத்தரவை தொடர்ந்து, தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு நேற்று வந்தனர், மேலும் அரசு கூறியுள்ள பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் திருவில்லிபுத்தூர் அருகே அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ரூபாய் ஆயிரம் வழங்கினார்.

தமிழக பள்ளி கல்வித்துறை ஜூன் 14ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து, மாணவர் சேர்க்கை, மாற்று சான்றிதழ் வழங்கும் பணி உள்ளிட்ட நிர்வாக பணிகளை தலைமை ஆசிரியர்களை கொண்டு நடத்த உத்தரவிட்டிருந்தது.

இதன்படி விருதுநகர் மாவட்டம், திருவில்லிப்புத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி முன்னிலையில் நேற்று நடந்தது.

அப்போது புதிதாக முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்களுடன், தனது சொந்த செலவில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ரூ.1000 வழங்கினார். அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டில் இப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு மொபைல் போன்களை தலைமை ஆசிரியர் வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, அவர் கூறும்போது, இந்த பள்ளியில் 5ம் வகுப்பு வரை உள்ளது. அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக நேற்று முதலாம் வகுப்பு சேர வந்த மூன்று மாணவர்களுக்கு தலா ஆயிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் சேரும் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், என்றார்.

Related Articles

Latest Posts