அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Tamil Nadu Teacher Protest Latest News | போராட்டம் ஆசிரியர்கள் சம்பளம் பிடிக்க உத்தரவு

Tamil Nadu Teacher Protest Latest News | போராட்டம் ஆசிரியர்கள் சம்பளம் பிடிக்க உத்தரவு

Tamil Nadu Teacher Protest Latest News

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும், 12 ஆண்டுகளுக்கு மேலாக பகுதிநேர சிறப்பு நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டி தேர்வு இல்லாமல் தங்களை ஆசிரியர் பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் தொடர் உண்ணாவிரத காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் சுமார் 300 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் போராட்ட குழு ஆசிரியர்கள் தலைமை செயலகத்தில் உள்ள பள்ளி கல்வி செயலர் காகர்லா உஷா, இயக்குனர் அறிவொளி சந்தித்தனர். அப்போது பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். பின்னர், அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்கள் இன்று பள்ளி செல்வதை புறக்கணித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று  இடைநிலை ஆசிரியா்கள் மூன்று ஆயிரம் பேர் இன்று நடந்த எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் அவர்களது ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூத்த அதிகாரிகள் சிக்னல் கொடுக்கும்பட்சத்தில் போராட்டத்தை ஒடுக்க, அவர்கள் மீது ஓழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்க கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இருந்தபோதிலும் கோரிக்கை நிறைவேறும் வரை போரட்டம் தொடரும் என ஆசிரியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Latest Posts