அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

கௌரவ விரிவுரையாளர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க உத்தரவு

தமிழக உயர் கல்வித்துறையின் செயல்படும் கல்லூரி கல்வி இயக்ககத்தின் இயக்குனர் அனைத்து அரசு கல்லூரி முதல்வர் நேற்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பினார்.

அதில் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (முந்தைய 14 உறுப்பு கல்லூரிகள் உட்பட) பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களில் 30.09.2019 அன்று பிஎச்டி, செட், ஸ்லெட், நெட், சிஎஸ்ஐஆர் கல்வி தகுதிகளுடன் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட பணி அனுபவம் பெற்றவர்கள் மட்டும் சான்றிதழ் சரிபாாப்பிற்காக, ஒதுக்கப்பட்ட நாட்களில் உரிய அனைத்து சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை (அல்லது) முதல்வர் கையொப்பமிட்ட ஆளறிச் சான்றிதழ் (புகைப்படத்துடன்) ஆகியவற்றை நேரில் கொண்டுவருமாறு கௌரவ விரிவுரையாளர்களுக்கு தெரிவிக்குமாறு கல்லூரி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தெரிவித்த விவரத்தினை ஒப்புகை கையொப்பம் பெற்று பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் நாள் மற்றும் விவரம்:

சென்னை, வேலூர் மற்றும் தருமபுரி மண்டலத்தில் கீழ் உள்ள கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் வரும் 15 மற்றும் 16ம் தேதியில் சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகம், ராஜீவ் காந்தி சாலை, தரமணி (மத்திய கைலாஷ் அருகில்) உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

கோவை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மண்டலத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகம், ராஜீவ் காந்தி சாலை, தரமணி (மத்திய கைலாஷ் அருகில்) உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்பு பணி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Articles

Latest Posts