அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.2 C
Tamil Nadu
Tuesday, May 30, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகளை வழங்கிய ஆசிரியர் சங்கத்தினர்

இந்த சமூகம் ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, ஆசிரியர்கள் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். இதற்கு கடந்தகால சான்றாக புயல் பாதிப்பு, கொரோனா நெருக்கடி காலத்தில் ஆசிரியர் சமூகத்தின் பணி அளப்பறியது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தங்களால் இயன்றவரை நிதி திரட்டி, அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகளை வழங்கியுள்ளனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்டம் சார்பில் கடந்த இரண்டு வாரங்களாக, சங்க நிர்வாகிகள் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்களை உதவும் நோக்கில், ஆசிரியர்களிடம் நிதி திரட்டியுள்ளனர்.

மேலும், இந்த நிதியை பயன்படுத்தி, ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகளை வாங்கி, கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அவர்களிடம் வழங்கியுள்ளார். இந்த மூன்று இயந்திரங்கள், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

IMG 20210523 WA0005

மாவட்ட ஆட்சியர் சந்திப்பின்போது, மாவட்ட செயலாளர் அரசு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.  

Related Articles

Latest Posts