அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23.3 C
Tamil Nadu
Monday, December 11, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

கொரோனா அதிகரிப்பு – 12ம் வகுப்புக்கு விடுமுறை அளிக்க வேண்டும் – தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் வெளியிட்ட அறிக்கை, கொரோனா தொற்று காலத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி முடங்கியிருந்த நிலையில், நேரிடை வகுப்புகள் கைகொடுக்கும் என்று வலியுறுத்தியதன் பேரில், கடந்த ஜனவரி மாதம் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது.

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் இந்த கல்வியாண்டில் தேர்ச்சி அளித்த பிறகு, மறு உத்தரவு வரும் வரை விடுமுறையளிக்கப்பட்டது.

தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வருவது வேதனை அளிக்கிறது.

தற்போது கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் 40 ஆயிரத்தையும் தாண்டி குறிப்பாக தமிழகத்தில் 1,385 பேர் கொரோனா பாதித்து 10 பேர் உயிாிழந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் சுகாதாரத்துறை செயலாளர் தமிழகத்தில் கொரோனா ஏறுமுகமாக உள்ளது என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இதனால் பொது தேர்வு என்பதால் 12ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளை தினந்தோறும் அச்சத்தோடு பள்ளிக்கு அனுப்பிவைக்கிறோம் என பெற்றோர்கள் கவலையோடு தெரிவிக்கிறார்கள்.

எனவே பெற்றோர்களின் அச்சத்தை போக்கவும் மாணவர்கள் நலன் கருதியும்12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். இந்த கல்வியாண்டில் பொதுதேர்வினை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வுகள் நடத்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும், இவ்வாறு, அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Posts