அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

தேர்தல் பணிக்கு விலக்கு கோரினால், கட்டாய பணி ஓய்வா? ஆசிரியர்கள், ஊழியர்கள் ஷாக் – Election 2021

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முன் பணி நடந்து வரும் நிலையில், இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். உடல் நலம் இயலாமை, நோய் பாதிப்பு ஆகியோர் மருத்துவ காரணங்களால் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க கோரி விண்ணப்ப கடிதம் கொடுத்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர், தேர்தல் பணிக்கு முழுக்கு போடவும், வேண்டுமென்ற தேர்தல் பணியிலிருந்து விடுவிக்குமாறு கடிதம் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், புதுச்சோி துணை மாவட்ட தேர்தல் அதிகாரி கொடுத்த ஒரு ஷாக் கடிதத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுச்சேரி சட்டமன்ற தோ்தல் செம்மையாக நடத்த, அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, சுமார் 5,759 வாக்கு சாவடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தோ்தல் பணிக்காக ஆணை பெற்ற வாக்குசாவடி அதிகாரிகள் அலுவலர்கள் பல்வேறு மருத்துவ காரணங்கள் முன்வைத்து தங்களை தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்குமாறு விண்ணப்பித்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பணி என்பது தவிர்க்க இயலாத முதன்மையாக கடமை என்பதை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மருத்துவ காரணங்கள் முன்வைத்து பணியிலிருந்து விலக்கு அளிக்குமாறு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சுகாதாரத்துறையில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மருத்தவ குழுவின் பரிசீலைனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மருத்துவ குழுவானது, விண்ணப்பத்தாரர்கள் கூறிய மருத்துவ காரணங்களால் பணி செய்ய இயலாது என்பது பரிந்துரைக்கப்படும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பெயர்கள் கட்டாய பணி ஓய்வு அளிக்க அவர்களுகடைய துறைக்கு பரிந்துரைக்கப்படும். மேலும் மருத்துவகுழுவினரால், தேர்தல் பணியாற்ற தகுதியுடையவர்கள் என்று பரிந்துரைக்கப்படும் அலுவலர்களின் பெயர்கள், தவறான மருத்துவ காரணங்கள் கூறி, தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரியதற்காகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி கடைமைகளிலிருந்து தவறியவர்களாகவும் கருதப்பட்டு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Posts