அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

அரசு பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு – நீதிமன்றம் உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது.

சென்டர்களில் டியூஷன் எடுப்பது, பகுதி நேரமாக வருவாய் ஈட்டும் நோக்கில் யூடூப் சானல்கள் நடத்துவது ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வீடுகளில் டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கும் நிலையில், இதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தவும் உயர்நீதிமன்ற கிளை பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையை சேர்ந்த ராதா என்பவர் தனது இடமாறுதல் கோரிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தொடா்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி எஸ்.எம். சுப்பரமணியம் இந்த உத்தரவையும், கருத்துகளையும் பிறப்பித்திருந்தார். 

அது மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு சந்தேகத்திற்கிடமின்றி போதுமான அளவு தொகையை ஒதுக்குகிறது. ஆனால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு அந்த அளவிற்கான தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குகிறார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்பது போன்ற கருத்துக்களையும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை செயலர், மாவட்டம் தோறும் சிறப்புக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக தொழில் செய்வது பகுதி நேர வேலைகளை செய்வது, டியூஷன் சென்டர் நடத்துவது, வீடுகளில் டியூசன் எடுப்பது போன்றவை தொடர்பான தகவல்கள் புகார்கள் ஆவணங்களை சேகரித்து தொடர்புடைய ஆசிரியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Latest Posts