அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

மீண்டும் கொரோனா போராபத்து- உடனடியாக பள்ளிகள் மூடப்பட வேண்டும் – கல்வி இயக்குனருக்கு வேண்டுகோள்

குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மீண்டும் கொரோனா பரவலை தடுக்க முக கவசம், சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பள்ளிகளில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது, இதனால் ஆசிாியர்கள், மாணவா்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  மாணவர்கள் உயிர் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் முன்வைத்துள்ளனர் மற்றும் பள்ளி கல்வித்துறை காலதாமதமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் – சா.அருணன் அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில்,

கடந்த ஜனவரி 19 முதல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது பின்பு 9ம் வகுப்பு மற்றும் 11ம் மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த சில வாரங்களாக மாணவ மாணவிகளுக்கு கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவிவருகிறது, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பட்டை அரசு உதவிபெறும் பெண்கள் மேனிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகள 20 பேருக்கு நேற்றுத் தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 56 மாணவிகளையும் பல்வேறு மருத்துமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.   

சுகாதாரத்துறையே, தமிழகத்தில் கொரோனா இண்டாம் அலை தொற்று வேகமாக பரவி வருகிறது என எச்சரிக்கும் சூழ்நிலையில் தொடர்ந்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் பரவல் மேலும் வேகமாக பரவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குறிப்பாக, பள்ளியில் இருக்கும்வரை மாணவர்கள் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர், பள்ளி வளாகத்திற்கு வருவதற்கு முன்னும், பின்பு வெளியில் செல்லும்போது கட்டுப்பாடின்றி தொற்றின் நிலை அறியாமல் இருக்கின்றனர்.

எனவே மாணவர்கள் நிலையறிந்து அவர்கள் நலன் காக்கும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுகொள்கிறது.

Related Articles

Latest Posts