அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

போலி சான்றிதழ் கொடுத்து 31 ஆண்டுகள் பணியாற்றிய பலே தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

போலி சான்றிதழ் கொடுத்து 31 ஆண்டுகள் பணியாற்றிய பலே தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

காவேரிபட்டணம் அருகே அரசு பள்ளியில் போலி சான்றிதழ் மூலம் 31 ஆண்டுகள் பணியாற்றிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

READ THIS: மாணவர்கள் நலனின் அக்கறை இல்லையாம் – அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அடுத்த சோபனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுமதி (56). இவர் கடந்த 1991 ஜூன் 17ம் தேதி, காவேரிபட்டணம் அடுத்த சாத்தனூர் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். பின்னர் தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று பாறையூர், திம்மேநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றியுள்ளார். இவரது பணி பதிவேட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு, பட்டயப்படிப்பு சான்றிதழ்களை முன்னிலைப்படுத்தி பதிவு செய்ய, பல முறை அறிவுறுத்தியும், இவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு தேர்வுகள் உதவி இயக்குனா் ராகினி தலைமை ஆசிரியை சுமதி, தனது 10ம் வகுப்பு சான்றிதழ் நகலில் போலியாக திருத்தம் செய்து பணியில் சேர்ந்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், துறை ரீதியாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யுமாறும் வட்டார கல்வி அலுவலர் சபிக் ஜானுக்கு கடந்த 10ம் தேதி கடிதம் அனுப்பினார்.

இந்த தகவலை வட்டார கல்வி அலுவலர், கடிதம் மூலம் மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடிக்கு அனுப்பினார். இந்த நிலையில் தலைமை ஆசிரியை சுமதி, தன் மீதான புகாரின் மீது உரிய அளிக்க விளக்கம் அளிக்காமலும், பிப்ரவரி 3ம் தேதி முதல் தொடர் மருத்துவ விடுப்பு எடுத்தும் இருந்துள்ளார். இதையடுத்து கல்வி அலுவலர் சுமதியை, சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டுளார்.

போலி ஆவணங்கள் சமர்பித்து 31 ஆண்டுகளாக அரசு பள்ளியில் ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியையாக பணியாற்றிய சுமதி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Posts