சென்னை :
Who is the Mahalakshmi?
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் வட்டம், அரசவெளி அரசு பழங்குடியினா் நல உண்டி உறைவிட ஆரம்ப பள்ளி இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர் க.மகாலட்சுமி.
இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது,
இவர் ஆதிராவிடர் நலத்துறையில் நடந்த முறைகேடுகளை சமூக வலைதளங்களில் அம்பலபடுத்தியவர். இதுதவிர, பள்ளி, சத்துணவுக்கான நிதியை சுரண்டியவர்களின் முகத்திரையை கிழித்தவர். மேலும் குழந்தைகள் உரிமைகள், நலன்கள் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டு வருபவர்.
இவரது செயல்பாடு, அங்குள்ளவர்களுக்கு தொடர் இடையூறாக இருந்தது. மேலும், சுரண்டல் அதிகாரிகள் குறித்து, இவர் ஆதாரப்பூர்வமாக, புகார் மனு கொடுத்தும், கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டனர்.
இவரை, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில், அதிகாரிகள் திட்டம் தீட்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆசிாியை மகாலட்சுமி சஸ்பெண்ட் செய்ததற்கு கண்ட குரல்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளது.
What is Suspension Reason for Teacher Mahalakshmi?
பள்ளி தலைமை ஆசிரியர், அரசு உத்தரவு மதிக்காமல் தொடக்கப்பள்ளியை ஒருங்கிணைத்து தொடர்ந்து பள்ளியை நடத்தி வந்தது, உயர் அலுவலா்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், பள்ளி குழந்தைகளுக்கு அசைவ உணவு தயாரித்து, பள்ளி குழந்தைகளுக்கு வழங்கியது, வெளியில் பணம் வசூல் செய்து, பள்ளிக்கு உலோக மேற்கூரை அமைத்தது, அலுவலர்களிடம் கன்னியக்குறைவாக நடந்தது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடும் எதிர்ப்புக்கு பிறகு, மீண்டும் அவரது பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |