You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

நிதி அமைச்சரின் புதிய கல்வி அறிவிப்புகள் என்னென்ன?

நிதி அமைச்சரின் புதிய கல்வி அறிவிப்புகள் என்னென்ன?

தொழில்துறையினர் மற்றும் கல்வி நிறுவனங்களின் வீடியோ கான்ஃபரன்சிங் போன்ற இணையவழி செயல்பாடுகளை எளிமையாக்க திட்டம் - நிதியமைச்சர்.

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழிக் கல்வி வழங்க ஊக்குவிக்கப்படுகிறது. இ- பாடசாலைத் திட்டத்தின் கீழ் மேலும் 200 பாடப்புத்தகங்கள் ஆன்லைனில் சேர்க்கப்பட்டுள்ளன - நிதியமைச்சர்.

ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் மாணவர்கள் கல்வி கற்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இணையவழி சேவை இல்லாதவர்களுக்கு டிடிஎச் மூலம் கல்வி கற்க ஏற்பாடு - நிதியமைச்சர்.

இணையதளம் மூலம் கல்வி கற்பதற்காக ''ஐ காட்'' திட்டம் புதிதாக அறிமுகம் - நிதியமைச்சர்.

1-ம் வகுப்பு முதல் 12- வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் தனி கல்விச் சேனல். ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க இ-வித்யா என்ற புதிய திட்டம் அறிமுகம்- நிதியமைச்சர்.

மே 30ம் தேதி முதல் ஆன்லைனில் பாடம் நடத்த 100 முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி. 2025க்குள் அனைத்து குழந்தைகளும், 5ம் வகுப்பு படிப்பதை உறுதி செய்யும் திட்டம் டிசம்பரில் அறிமுகம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

செவித்திறன் மற்றும் பார்வைதிறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, மின்- பாடங்கள் (இ-புக்) உருவாக்கப்படும். ஆன்லைன் படிப்புகளை தொடங்க 100 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி. டிடிஎச் நிறுவனங்கள் தினமும் 4 மணிநேரம் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கேட்டுக் கொள்ளப்படுவர் - நிதியமைச்சர்.

ஊரடங்கு காலத்தில் பல மாணவர்களுக்கு மன ரீதியாக ஆதரவு தேவைப்படுகிறது தேவைப்படுகிறது. இதற்காக 'மனுதர்பம்' என்ற நிகழ்ச்சி பிரதம மந்திரியின் இ-வித்யா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் - நிதியமைச்சர்