அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Chief educational Officer Arrested by DVAC | விருதுநகர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் கைது?

Chief educational Officer Arrested by DVAC | விருதுநகர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் கைது?

Chief educational Officer Arrested by DVAC

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முதன்மை ராமன் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளதாக வௌியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றவர் ராமன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பணிமாறுதல் போது, இவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் மாவட்ட முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பணி ஒப்புதல் அளிப்பதற்காக ஒவ்வொரு பணியிடத்திற்கும் தலா ரூ 8 லட்சம் வீதம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

இதனால் பல ஆசிரியர்கள் அவர் மீது கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் ஒரு ஆசிரியர் லஞ்ச ஒழிப்பு போலீசாரில் இதுதொடர்பாக புகார் அளித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பணி மாறுதல் காரணமாக, இவருக்கு அலுவலகம் சார்பில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. அப்போது லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அங்கு வந்தனர். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆசிரியர்களிடம் வழங்கி அவரிடம் அந்த பணத்தை வழங்க ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மறைந்திறந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் பணம் பெறும் கையும் களவுமாக பிடித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. பின்னர் அவர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் நேரடி நியமனத்தில் பணி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Posts