அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
37.3 C
Tamil Nadu
Thursday, June 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Anbil Mahesh Latest Press Meet | ஆசிரியர்கள் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும்

Anbil Mahesh Latest Press Meet | ஆசிரியர்கள் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும்

Anbil Mahesh Latest Press Meet

நிதிநிலைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது, பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பரிசீலித்து நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார். கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர்கள் எந்த போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவர்களை எட்டிப் பார்க்ககூட வராத ஆட்சியாளர்கள்தான் இருந்தனர். ஆனால், நாங்கள் ஆசிரியர்களின் வலியையும், வேதனையையும் அறிந்தவர்கள்.

Read Also: ஆசிரியர் நிதி சார்ந்த பிரச்னை தீர்க்கவில்லை

எனவே நிதிநிலைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். ஆசிரியர்கள் எதற்கும் வருந்த வேண்டாம். இது உங்களுக்கான ஆட்சிதான். அந்த நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார். துறை அமைச்சர் என்கிற முறையிலும் நானும் ஆசிரியர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்.

ஈரோட்டில் இடைதோ்தல் நடைபெறும் பகுதியில், கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது ஒரே ஒரு வார்டில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றுள்ளது. அந்த வார்டுதான் தற்போது திருச்சி தெற்கு மாவட்ட திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சவால் எங்களுக்கு தேவைதான். நிச்சயம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் வெற்றிபெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Latest Posts