நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
பெருந்துதொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சோ்க்கை அதிகரித்துள்ளது.
அதற்கேற்ப, 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில், 15 சதவிகிதம் வரை இடங்கள் அதிகரிக்கப்பட்டது வரவேற்புக்குரியது. இன்று மக்கள் அரசு பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள். இதற்கேற்ப பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மாணவர்கள் ஆங்கிலத்தை தன்னம்பிக்கையோடு பேசவும், எழுதவும் தேவையான பயிற்சிகள் ஆன்லைன் வகுப்புகளை தங்கு தடையின்றி நடத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை அளிக்கப்பட வேண்டும்.
தரமான, நூலகங்கள், ஆய்வகங்கள் காற்றோட்டமான வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், சுத்தமான கழிப்பறை, ஆரோக்கியமான மதிய உணவு, நவீன விளையாட்டு உபகரணங்கள் என நம் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளை விட பன்மடங்கு மேம்பட்டதாக மாற்ற முடியும். தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றலும் உண்டு. இதை சாத்தியமாக்க வேண்டும்,
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |